தேர்தல் கில்லாடி பரணி கார்த்திகேயன்... மு.க.ஸ்டாலின் சர்டிஃபிகேட்
Recommended Video
சென்னை: அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயனை தேர்தலில் கில்லாடி என மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார்.
அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த பரணி கார்த்திகேயன் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் அவரை சேர்ப்பதற்கு முன்பு திமுக மாவட்டச் செயலாளர் ரகுபதியிடம் பரணி கார்த்திகேயனை பற்றி முழு விவரத்தையும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.
தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சி... மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
தேதி இல்லை
ரகுபதி அளித்த பதில் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் பரணிக்கு கிரீன் சிக்னல் கொடுத்து கட்சியில் இணைத்துக்கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து புதுக்கோட்டையில் வைத்து ஆதரவாளர்கள் இணைப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தேதி கேட்டு வந்தார் பரணி கார்த்திகேயன். செந்தில்பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு தேதி கொடுத்து கரூர், தேனிக்கு நேரடியாக சென்ற ஸ்டாலின் பரணிக்கு புதுக்கோட்டை வர தேதி கொடுக்கவில்லை.
75 பேருந்துகள்
இந்நிலையில் சென்னையிலேயே இணைப்பு விழாவை நடத்துமாறு தலைமைக்கழகத்தில் இருந்து பரணி கார்த்திகேயனுக்கு கடந்த வாரம் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து 75 பேருந்துகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தமது ஆதரவாளர்களை நேற்றிரவு அழைத்து வந்து இன்று காலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தார் பரணி கார்த்திகேயன்.
கட்சிக்கொடி
வழக்கமாக மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா என்றால் அண்ணா சாலையில் விளம்பர பதாகைகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் இன்று விழா நடந்ததற்கான சுவடே தெரியவில்லை, அந்தளவுக்கு எந்த பேனரும் வைக்காமல் வெறுமனே கட்சிக்கொடியை மட்டும் பறக்கவிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முகத்தில் பிரகாசம்
வரும் தேர்தல்களில் பரணி கார்த்திகேயனுக்கு திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை மறைமுகமாக உணர்த்தும்வகையில், இப்போது பரணிகார்த்திகேயனை வரவேற்று வாழ்த்துகிறேன், விரைவில் அவரை பாராட்டவும் செய்வேன் என பொடி வைத்து பேசினார் ஸ்டாலின். இதைக்கேட்டு ஆயிரம் வாட்ஸ் பல்பை போல் பிரகாசித்தது பரணி கார்த்திகேயன் முகம். உடனடியாக எழுந்து நின்று ஸ்டாலினை நோக்கி தலைவணங்கினார்.
|
காலில் விழ வேண்டாம்
பரணி கார்த்திகேயனை பற்றி விசாரித்ததில் அவர் தேர்தலில் கில்லாடி என என தகவல் கிடைத்தது என ஸ்டாலின் பேச, மீண்டும், பரணிக்கு இருப்புக் கொள்ளவில்லை, எழுந்து நின்று வணங்கினார். இதைக்கவனித்த ஸ்டாலின், திமுகவில் காலில் விழும் கலாச்சாரம் இல்லை என்றும், யாரையும் யாரும் துதிபாடத்தேவையில்லை எனவும் பேசினார். இதைப்புரிந்துகொண்ட பரணி தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.