கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார்.
Recommended Video
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1984-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். 1984-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மு.க.ஸ்டாலின்.
1989-ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஸ்டாலின். 1991-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஸ்டாலின், 1996-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
2001, 2006 சட்டசபை தேர்தல்களிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார் ஸ்டாலின். 2011, 2016 தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஸ்டாலின். தற்போது 3-வது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
சட்டசபை தேர்தலில் 9-வது முறையாக போட்டியிடுகிறார் ஸ்டாலின். அவர் விருப்ப மனு கொடுத்த போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர். திமுகவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க இன்று கடைசி நாள் ஆகும்.