எப்படி, யாரிடமிருந்து வருதுன்னே தெரியலை..செல்லூர் ராஜூவிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
கொரோனா நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கூ
சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது.
எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கிறார். அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார்களே.. அவர்கள் லைஃப் எப்படி இருக்கிறது தெரியுமா?
இந்த நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செல்லூர் ராஜூவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லூர் ராஜூவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக தலைவர் தனது ட்விட்டர் பதிவில் செல்லூர் ராஜூவிடம் நலம் விசாரித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில்,
Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.