பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள்... நாம் வாழ; மருத்துவர்கள் நலம் வாழட்டும் -மு.க.ஸ்டாலின்
சென்னை: பிறருக்காகவே வாழ்பவர்கள் மருத்துவர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மருத்துவர் தினம் என்பதால் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை
மருத்துவர்கள் தினம்
தன்னுயிரைப் பற்றி மட்டுமே கவலைப்படும் பெரும்பான்மை மனிதர்களுக்கிடையே, பிறர் உயிர் வாழ்தலைப் பற்றியும் கவலைகொள்பவர்கள் மருத்துவர்கள். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை! அப்படி வாழ்ந்த பி.சி.ராய் எனப்படும் மருத்துவரின் பிறந்தநாளில் மருத்துவர்கள் தினம் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறது.
பி.சி.ராய் பிறந்தநாள்
மருத்துவராக மட்டுமல்ல; மக்கள் தலைவராகவும் இருந்தவர் அவர். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர். முதலமைச்சராக இருந்தபோதும் தினமும் இலவச மருத்துவம் செய்தவர். தனது வீட்டையே மருத்துவமனைக்காகக் கொடுத்தவர். வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்து பலகாலம் ஆனபிறகும் பி.சி.ராய் நினைக்கப்படக் காரணம் அவரது பொதுநலம்; இந்த நாட்டு மக்கள் மீது வைத்த அன்புக்குணம்.
கருணை
பொதுநலனும், கருணை உணர்வும் மிக்க மனிதசேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை இன்று உலகம் உணர்ந்துவிட்டது. இன்று உலகமே மருத்துவர்களை மட்டும்தான் நம்பி இருக்கிறது. கொரோனா என்ற நோய்த்தொற்று பரவி மனித சமுதாயத்தை மிரள வைத்துள்ள நிலையில் அதற்கு அஞ்சாமல் போராடுபவர்கள் மருத்துவர்கள். இந்தப் பூமிப்பந்தைத் தனது சேவை உள்ளத்தால் உயிர்ப்பித்துக் கொண்டு இருப்பவர்கள் மருத்துவர்கள்.
நாடு வாழ நாம் வாழ
ஒவ்வொரு மனிதனின் உயிருக்குப் பின்னே, உடல்நலத்துக்குப் பின்னே, மகிழ்ச்சிக்குப் பின்னே இருப்பவர்கள் மருத்துவர்கள் தான்.நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்! மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சுக்கு இனிய நல்வாழ்த்துகள்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.