பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் புதிய தலைவர் முருகன்-மகிழ்ச்சி-திடீரென சிலாகிக்கும் 'முரசொலி'
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவரான முருகன், அக்கட்சியின் அடையாளத்தையே மாற்றி வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக முரசொலி திடீரென பாராட்டி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
முரசொலி நாளேட்டில் (ஆக.31) தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:
தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் முருகன் பா.ஜ.க.வின் அடையாளத்தையேமாற்றி வருகிறார். இராமர் இடத்தில் முருகனை வைத்து இருக்கிறார். நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
குறிஞ்சி நில மக்களின் வழிபடு தலைவன் முருகன். ஆனால், பா.ஜ.க. முருகன், இராமரிடத்தில் குறிஞ்சி முருகனை வைப்பதைஏற்றுக்கொள்கிற போது, நாம் புதிய மாறுதலைப் பெற்று இருக்கின்றோம்.
பேஸ்புக்- வாட்ஸ் ஆப்-பாஜக தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த காங். வலியுறுத்தல்
இங்கேயுள்ள தமிழர்கள் விநாயகரை ஏற்று வழிபடுபவர்கள். சதுர்த்தியை அப்படிக்கொண்டாடக் கூடியவர்கள். வட மாநிலத்தவர்கள் முருகனை வழிபடுவதில்லை. அதற்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார் பா.ஜ.க. முருகன். அதற்காக நாம் அவருக்கு நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
ஆனால், 'ஒரிஜினல்' பா.ஜ.க.வினர் அதற்கு சம்மதிக்க வேண்டுமே! அவர்கள் கணக்கு வேறாயிற்றே!!
இவ்வாறு முரசொலி தலையங்கத்தின் ஒருபகுதியில் எழுதப்பட்டுள்ளது.