21 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
சென்னை: 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையடுத்து திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.
முதல்வருக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் திருவாரூர், திருப்பரங்குன்றம், ஒசூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் ஏற்கெனவே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரி வந்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடப்போவது எந்த தொகுதிகள்? இன்று முடிவு
அதன்படி இன்று வேட்பாளர்களுக்கான நேர்காணலை நடத்த திமுக திட்டமிட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் தொடங்கியது. முதலில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு நேர்காணல் தொடங்கியுள்ளது.
21 தொகுதி இடைத்தேர்தல்.. #திமுக வேட்பாளர் #நேர்காணல் தொடங்கியது #DMK pic.twitter.com/sJsiok7Uoe
— Oneindia Tamil (@thatsTamil) March 9, 2019
ஒரே நாளில் 21 தொகுதிகளுக்கும் நேர்காணலை நடத்தி முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.