முந்திரிக்கொட்டை அமைச்சர்..அதை இன்னும் நீங்க மறக்கலையா?.. என்ன உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!
தமிழகத்தில் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் இருக்கிறார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் இருக்கிறார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
திமுக கட்சி சார்பாக கரூரில் முக்கிய விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினரும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மூலம் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பலர் திமுகவில் இணைந்தார்கள்.
அதிமுக, பாமக, தேமுதிக, பாமக உறுப்பினர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு திமுகவில் இணைந்தார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இவர்கள் எல்லோருக்கு உறுப்பினர் அட்டை கொடுத்தார்.
உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து திமுக தொண்டர்கள் முன்னிலையில் பேசிய உதயநிதி ஸ்டாலின். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஒரு அரசு வேலை கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்றுதான் இளைஞர்கள் நினைப்பார்கள். ஆனால் அதிலும் கூட இந்த அதிமுக அரசு மோசமாக முறைகேடு செய்துள்ளது. இளைஞர்களின் வாழ்க்கையில் அதிமுக விளையாண்டு இருக்கிறது.
திமுகதான்
அதற்கும் குரல் கொடுத்த ஒரே கட்சி திமுக தான்.இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முதலில் கேட்டது திமுக தலைவர் ஸ்டாலின்தான். தற்போது சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. சிலரை கைது செய்துள்ளனர். ஆனால் இதெல்லாம் கண்கட்டி வித்தை. பொறுப்பில் உள்ளவர்கள்தான் இந்த மோசடியை செய்தது.
சிலர் இருக்கிறார்கள்
பொறுப்பில் இருக்கும் சிலர்தான் இந்த முறைகேட்டை செய்து இருக்கிறார்கள்.முறையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதை செய்ய வேண்டும் என்றால் உடனே திமுக சொன்னது போல சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். ஆனால இதை சொன்னால் முந்திரிக்கொட்டை அமைச்சருக்கு கோவம் வரும். உடனே வந்து அவர் பேட்டி கொடுப்பார்.
யார் என்று தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா? இன்னும் தெரியவில்லையா? என்னது டயர் நக்கியா? அட அவர் வேற? அதை இன்னுமா மறக்காம வச்சு இருக்கீங்க ?அவர் தேர்தல் வரும் போது வருவார். மீண்டும் டயரை நக்கிக் கொண்டு வருவார். அவருக்கு தேர்தல் வரும் போதுதான் அரசியல் ஞாபகம் வரும். அப்போதுதான் அவர் அரசியல் செய்வார்.
மக்கள் பாடம் 4
அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நான் சொல்வது வேறு ஒரு முந்திரிக்கோட்டை அமைச்சர் பற்றி. அவர் எதற்கெடுத்தாலும் செய்தியாளர்களை கூப்பிட்டு தவறாக பேட்டி அளிப்பார்.மைக்கை நீட்டினாலே போதும் பேட்டி கொடுத்துவிடுவார். பாதி நேரம் மெயின் ரோட்டில் வைத்து கூட பேட்டி கொடுப்பார்., என்று உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் கிண்டல் செய்துள்ளார்.