ராஜ்யசபா தேர்தல்: திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்பு மனுத்தாக்கல்!
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அந்த இடத்துக்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைகோ மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேநேரத்தில் வைகோவுக்கு எதிரான தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வைகோ மீது எத்தனையோ அரசியல் வழக்குகள் தொடரப்பட்டாலும் தேசதுரோக வழக்கில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ ராஜ்யசபா எம்.பி.யாவதில் சிக்கல் இருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேசதுரோக வழக்குகளின் கீழ் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட தடை என இடம்பெறவில்லை; அதனால் வைகோவுக்கு சிக்கல் ஏற்படாது எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் வைகோவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதையடுத்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவையும் வேட்புமனு தாக்கல் செய்யுமாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இதையடுத்து என்.ஆர். இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.