ராயபுரம் தொகுதியில் திமுகதான் போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார்: ஆர் எஸ் பாரதி
சென்னை: சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி காட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video
ராயபுரம் சட்டசபை தொகுதியில் அடிப்படை வசதி செய்து தராத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து ஆர் எஸ் பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:
ஜெயக்குமார் இன்று அமைச்சராக இருக்கிறார் என்றால் அது அவருக்கு திமுக போட்ட பிச்சை. அவரது தந்தையை கவுன்சிலராக உருவாக்கியது திமுக தான். அதனை மறந்து பேசக்கூடாது ஜெயக்குமார்.
ராயபுரம் தொகுதியில் கடந்த இரண்டு தேர்தலில்களில் திமுக மிகப்பெரிய தவறு செய்து விட்டது. காங்கிரசுக்கு கொடுத்ததால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டு முறை வெற்றி பெற்றார். ராயபுரத்தில் உள்ள அனைத்து டிவிஷன்களையும் பெண்கள் வார்டாக மாற்றியவர் ஜெயக்குமார்.. இந்த முறை திமுக ராயபுரத்தில் போட்டியிடும். அதிமுகவினரே ஜெயக்குமாரை இந்த தேர்தலில் தோற்கடித்துவிடுவர்.
சிபிஐ விசாரணை நடப்பதால் பொள்ளாச்சி விவகாரத்தை பேசக்கூடாது என்று வழக்குப் போட்டு இருக்கின்றனர் அதிமுகவினர். பொள்ளாச்சி விவகாரத்தை பொது இடத்தில் வைத்து விவாதிப்போம். இவ்வாறு ஆர்.எஸ். பாரதி கூறினார்.