தப்பிக்க வைக்க பார்க்கிறீர்களா.. திமுக உச்சநீதிமன்றத்தை நாடும்.. ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க முயன்றால் திமுக உச்சநீதிமன்றத்தை நாடும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்:
அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!
— M.K.Stalin (@mkstalin) December 21, 2018
ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா? pic.twitter.com/9PYbMa3jF4
அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!
ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில் நீடிப்பது நியாயமா?
இவ்வாறு ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ள ஸ்டாலின், முன்னதாக கீழ் நீதிமன்றங்களின் நீதிபதி பதவிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்பட ஆலோசிப்பது குறித்தும், கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) December 21, 2018
மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! pic.twitter.com/WE7VlSiUuh
மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்தப் பரிந்துரை - 'மாநில அரசுகளே தேவையில்லை' என்ற மத்திய பாஜக எஜமானத்தனத்தின் உச்சகட்ட ஆணவமாக இருக்கிறது.
மாநில சுயாட்சியின் உறைவிடமான தமிழகத்தில் இதுபோன்றதொரு அநீதியை அனுமதிக்காமல் இதனைக் கண்டித்து - தமிழக அரசு உடனே எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.