லோக்சபா தேர்தலில் ஸ்டாலினோட வியாபாரம் பழுக்காது… சட்டசபையில் இருக்கான்னு தெரியாது.. இது பொன். ராதா
Recommended Video
சென்னை: திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கப் போவதில்லை. சட்டசபை தேர்தலிலும் வியாபாரம் பழுக்காது என்று தெரிந்துவிட்டது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியிலும், திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல்வேறு அரசு திட்டங்களை மக்களுக்காக தந்துள்ளார்.
வரும் 1ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற இருக்கிற சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி அரசியல் ரீதியாக தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நான் நம்புகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்திருக்கின்றார். நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர். அவரை சந்தித்து உடல் நலம் விசாரிப்பது தவறு இல்லை.
திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கப் போவதில்லை. சட்டசபை தேர்தலிலும் வியாபாரம் பழுக்காது என்று தெரிந்துவிட்டது. ஒருவேளை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதை பார்த்துதான் கூறமுடியும் என்று விமர்சித்தார்.