கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை!
இந்தியா டுடே கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது 22 தொகுதியிலும் திமுகதான் வெல்லும் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. அவற்றில் 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியும் எஞ்சிய 4 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
22 தொகுதிகளும் ஆட்சியை நிர்ணயிக்க முக்கியம் என்பதால் ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற எதிர்கட்சியும் தீயாய் வேலை செய்தன. இந்நிலையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளின் முடிவும் எப்படி இருக்கும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி 22 தொகுதிகளில் திமுக 14 தொகுதிகளை வெல்லும் அதிமுக 3 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி, இந்தியா டுடே கருத்துக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக 22 தொகுதியிலும் வெற்றி பெரும்.
22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சட்டசபையில் திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும். அதிமுகவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.