வேண்டாம் CAA, NRC.. சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென சென்னை பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடகை தராட்டி வெளியேற்றுவேன்.. எதிர்வீட்டுக்காரன் அமைதியாக இருக்கணும்.. ராதாரவி ஷாக் பேச்சு
கண்டனம்
இதையடுத்து போலீஸார் 6 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர். 6 பெண்கள் கைதை எதிர்த்து ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கருணாநிதி வீட்டில்
இந்த நிலையில் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் என்ஆர்சிக்கு எதிராக கோலமிடப்பட்டிருந்தது. அது போல் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்தில் நேற்றைய இரவே கோலமிடப்பட்டிருந்தது.
திமுக நிர்வாகிகள்
இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து கோலமிடப்பட்டுள்ளது. இன்னும் சில திமுக நிர்வாகிகளின் வீட்டிலும் கோலமிடப்பட்டுள்ளது.
கோஷம்
அது போல் சென்னை முகப்பேரில் திமுக மகளிரணி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டத்தை கண்டித்து அங்கிருந்த பெண்கள் கோஷங்களையும் எழுப்பினர்.