சீசா போல் ஏறி இறங்கும் தங்கத்தின் விலை.. வெள்ளியும் அதே நிலைதான்.. மக்கள் வேதனை
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 38 குறைந்து ரூ 4,909 க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலையும் குறைந்துவிட்டது.
கொரோனாவால் தொழில்துறையில் தேக்க நிலை, பொருளாதார சரிவு, அமெரிக்க டாலர்கள் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு நாள் ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் இருக்கிறது.
இதனால் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள், பிட்காய்ன் உள்ளிட்டவற்றில் மக்கள் முதலீடுகளை செலுத்தி வந்த நிலையில் தற்போது தங்கத்தின் மீது முதலீடுகளை செலுத்தி வருகிறார்கள்.
அவர்களின் வயிற்றில் பாலை வார்ப்பது போல் தங்கம் விலையும் ஓவராக எகிறுகிறது. ரொம்ப குறைவாக குறைகிறது. அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் அதன் விலையேற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
டெல்லி மத கலவரத்தின் போது வெறுப்பு பேச்சு.. இன்று விசாரணை நடத்தும் டெல்லி ஹைகோர்ட்
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 38 குறைந்து ரூ 4,909க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ 304 குறைந்து ரூ 3,972 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை சவரன் 41,248 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் 20 பைசா குறைந்து ரூ 69.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.