சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு திடீரென தனது சிகிச்சை அளிக்கும் பணியிலிருந்து விலகியுள்ளார். சித்த மருத்துவம் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவர் இவர்.

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஆங்கில சிகிச்சை ஒரு பக்கம் அளித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைக் கொடுத்தது.

இதனால் தமிழக அரசும் சித்த மருத்துவர் வீரபாபுவை கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கொடுத்தது.

ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!! ஒரு மாதத்தில் தடுப்பு மருந்து... கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும்...டொனால்ட் ட்ரம்ப் ஆருடம்!!

பொறியியல்

பொறியியல்

இதையடுத்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க சாலிகிராமத்தில் இவருக்கு ஒரு பொறியியல் கல்லூரியில் தனி சித்த மருத்துவ மையத்தை சென்னை மாநகராட்சி ஒதுக்கியது. இந்த மையத்தில் இதுவரை உயிரிழப்பே இல்லாமல் இருந்து வந்தது.

கொரோனாவை விரட்டும் சித்தா

கொரோனாவை விரட்டும் சித்தா

பெரும்பாலான கொரோனா நோயாளிகள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்கவே விரும்பினர். இதனால் அந்த மையத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வந்தது. இந்த மையத்திலிருந்து இதுவரை 5400 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகள் இருந்தாலும் அவர்களுக்கு டாக்டர் வீரபாபு சிறப்பான சிகிச்சை அளித்து கொரோனாவை விரட்டுவதாக கூறப்பட்டது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இவரது சிகிச்சை முறைகளை ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தார்கள். இந்த நிலையில் மருத்துவம் அளிக்கும் பணியிலிருந்து சித்த மருத்துவர் வீரபாபு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்த பின்னர் நான் பணியிலிருந்து விலகிவிடுவேன் என வீரபாபு கூறியுள்ளார்.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்த நிலையில் இவரது விலகலால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீரபாபு விலகிய பின்னர் அண்ணா சித்த மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு சாலிகிராமம் சித்த மருத்துவ மையம் செயல்படும் என கூறப்படுகிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பெரும்பாலானோர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.

English summary
Doctor Veerababu stops his Siddha medicine treatment soon. Saligram Siddha Centre will be taken over by Anna Siddha hospital doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X