சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்ல.. 'அந்த’ சண்டையை பாக்காம விடக்கூடாது.. இது வேற லெவல் வெறித்தனம்!

நாய் ஒன்று சுவரில் ஏறி சண்டையை வேடிக்கைப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மனிதர்களுக்கு எப்போதும் சளைத்தவர்களில்லை என அவ்வப்போது ஏதாவது செய்து இணையத்தில் வைரலாகி விடுகின்றன விலங்குகள். அந்தவகையில் நாய் ஒன்றின் ஆர்வமான செயல் தான் தற்போது வைரல்.

நடிகர் விவேக் ஒரு படத்தில் சொல்வார், 'கூட்டமா சண்டை போட்டா வேடிக்கை பாக்கிறதும், கிணறைப் பார்த்தா எட்டிப் பார்க்கிறதும் நம்ம ரத்தத்தில் ஊறிப் போன ஒன்று' என. இது உண்மை தான். ஆனால் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல.. விலங்குகளுக்கும் பொருந்தும் என நிரூபித்திருக்கிறது இந்த நாய்.

dogs video goes viral now

பக்கத்து வீட்டில் யாரோ இருவர் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, ஆர்வம் தாங்காமல் நாய் ஒன்று மரத்தில் ஒரு காலும், சுவற்றில் ஒரு காலும் வைத்து அதை வேடிக்கை பார்க்கிறது. எங்கே அந்த நாய் கீழே விழுந்து விடுமோ என நாம் தான் பதற வேண்டி இருக்கிறது. ஆனால் அந்த நாய்க்கோ அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. எப்படியாவது அந்த சண்டையை எட்டிப் பார்த்து விட வேண்டும் என்பதில் தான் அதன் கவனம் முழுவதும் உள்ளது.

'என்ன ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்ல.. 'அந்த' சண்டையை பாக்காம விடக்கூடாது'.. என வேற லெவல் வெறித்தனத்தில் வேடிக்கை பார்க்கும் அந்த நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

English summary
A video of a dog climbing a wall to see neighbourhood fight goes viral in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X