பாமக மேல அப்படி என்னதான் கோபம் இந்த ஆனந்த்ராஜ்க்கு? என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: அன்புமணிக்கோ அல்லது பாமகவை சேர்ந்தவர்களுக்கோ ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டாம் என நடிகர் ஆனந்த்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ஆனந்த் ராஜ் பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்திலும் குணச்சித்தி வேடத்திலும் நடித்து வருகிறார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ்.ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் ஈடுபடாமல் அமைதியாக இருந்து வருகிறார். எந்த கட்சிக்கும் இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. பிரச்சாரமும் செய்யவில்லை.
தேர்தல் தோல்வியால் 'காண்டு'... பிரேமலதாவை போலவே மக்களுக்கு சாபம் கொடுக்கும் ராமதாஸ்
தில்லாக கூறிய ஆனந்த்ராஜ்
தற்போது மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நோட்டாவுக்கு தான் வாக்களித்ததாக தில்லாக கூறினார் ஆனந்த்ராஜ்.
தெரிவிக்கனும்
மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா ஆகிய அனைத்து கட்சிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார் ஆனந்த்ராஜ். மத்திய அரசு தமிழகத்தை சேர்ந்த திட்டங்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விரைவில் முடிவு
மேலும் அவர் பேசியதாவது, ஆர்கே நகர் பொருத்தவரை அது வந்த வெற்றியல்ல தந்த வெற்றி. என்னுடைய அரசியல் பயணம் பொருத்தவரை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவெடுப்பேன்.
பாமகவுக்கு கொடுக்காதீங்க
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து கட்சிகளும் பலவீனமாகத்தான் உள்ளது. குறிப்பாக சொல்கிறேன் என்னுடைய பணிவான வேண்டுகோள், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கோ அல்லது பாமகவை சேர்ந்தவர்களுக்கும் ராஜ்யசபா பதவியை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது என்றார்.
என்ன கோபம்?
அப்படி பாமக மேல் நடிகர் ஆனந்த ராஜ்க்கு என்னதான் கோபம் ஏன் இப்படி கூறினார் என தெரியவில்லை. மாற்றம் முன்னேம் என்று கூறி அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக கடைசி நேரத்தில் மக்களகை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதே நேரத்தில் சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பாமக கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.