சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- உறவினர் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது சகோதரர் மகன் ராஜூ தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் 169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருக்கிறார். பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார்.

Dont spread rumour regarding Nel Jayaramas health, says relative

சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் நெல் ஜெயராமன் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவரது சகோதரர் மகன் ராஜூ இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நெல் ஜெயராமன் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். நெல் ஜெயராமனுக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என ராஜூ தெரிவித்துள்ளார்.

English summary
Nel Jayaraman's Relative Raju urges not to spread rumour on his Health condition. He also thanked TN government's financial assistance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X