இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க சூப்பர் பானங்கள்.. டாக்டர் தீபாவின் அட்வைஸ்
சென்னை: இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இரு பானங்களின் தயாரிப்பு முறைகளை கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் தீபா விளக்கியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், இந்த கொரோனா காலத்தில் இயற்கையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிமுறைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
நாம் இரு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஒன்று இயற்கையான முறையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, இன்னொன்று மன அழுத்தத்தை எப்படி குறைப்பது. இயற்கையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகாவும் உணவும் பயன்படுத்தலாம்.
சன் தெரபி, யோக நித்ரா, அரோமா தெரபி.. கொரோனாவை ஓட ஓட விரட்டும் யோகா.. ஆச்சரியமூட்டும் டாக்டர் தீபா
தண்ணீர்
இவை இரண்டும் இரு கைகள் போன்றது. இதை செய்தால் கொரோனாவிலிருந்து நாம் மீள்வதற்கும் வராமல் தடுக்கவும் உதவும். நிறைய பேர் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். இதை குறைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுதான் முக்கியம், அதிலும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
தினமும் தண்ணீர்
சராசரியாக ஒரு மனிதன் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்து குறைந்தாலே நம் உடல் அமிலத் தன்மையாகிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. தொற்று எளிதில் நம் உடலில் பரவ உதவுகிறது. இதிலிருந்து விடுபட நாம் ஒரு நாளைக்கு 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது போல் கொரோனா நோயாளிகள் சுடுநீரை குடித்து வர வேண்டும்.
தோல் நீக்கிய இஞ்சி
இயற்கையான இரு பானங்களை நாம் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஒன்று அரை துண்டு பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு 50 எம்எல் சாரை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய இஞ்சி சாறு 50 எம் எல், கைப்பிடி அளவு துளசி இலைகளின் 20 எம்எல் சாறு, 5 எம்எல் எலுமிச்சை சாறு ஆகியவற்றை 100 முதல் 150 மில்லி தண்ணீரில் மஞ்சள் தூளுடன் கலந்து கொதிக்க விடவும்.
இரு வேளை
விட்டமின் சியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஒவ்வொரு செல்லில் இருக்கக் கூடிய கழிவுகளை நீக்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மஞ்சளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வைரஸுக்கு எதிரான தன்மை கொண்டதாக விளங்குகிறது. இந்த பானங்களை காலையும் மாலையும் இரு வேளைகள் எடுத்துக் கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
இன்னொரு பானம் எப்படி செய்வதை என்பதை பார்ப்போம். அதிமதுரம் 5 கிராம். 150 முதல் 200 மில்லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் தோல் நீக்கிய இஞ்சியை இடித்து 5 கிராம் அளவில் எடுத்து கொள்ளலாம். 10 துளசி இலை, கால் தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை 100 எம்எல் அளவுக்கு தினமும் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம் உடலில் கிருமிகளோ வேறு ஏதேனும் ஒவ்வாத வைரஸ்களோ உள்ளே சென்றால் அதை எதிர்க்க உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கலாம் என்றார்.