ஈழத் தமிழர் பிரச்சனை- பொது விவாதத்துக்கு ஸ்டாலின் தயாரா? ராமதாஸ் சவால்
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பொது விவாதத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினன் தயாரா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுகவைப் பொருத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை, செய்யப் போவதும் இல்லை.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்தது திமுக. இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறது.
திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது, தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் துரும்பைக் கூட திமுக அசைக்கவில்லை. இதுகுறித்து தம்முடன் பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் தயாரா?
இவ்வாறு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.