விஜயகாந்த்தை பார்த்து விட்டு வந்த குஷி போல.. ராமதாஸ் போட்ட செம சாப்ட் ட்வீட்
Recommended Video
சென்னை: விஜயகாந்த்தை நேரில் போய் பார்த்துவிட்டு வந்த குஷி போலும்! தண்ணீரை பற்றி மென்மையான ஒரு ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்!
அன்று வட மாவட்டங்களில் சரிக்கு சரியான ஓட்டு வங்கியை வைத்திருந்தது தேமுதிகவும், பாமகவும்தான்! தேர்தலில் கூட்டணி என்றால் இவர்களுக்கு பார்த்து பார்த்து தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை இப்போதும் இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் இரு கட்சிகளுமே இருப்பதால் கூட்டணி சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் விரைவில் அது சரி செய்யப்படும் என்றும் நம்பிக்கை கூறப்படுகிறது.
வீட்டுக்கு போங்க.. பேசி தீர்க்கலாம்.. ராமதாஸ் - விஜயகாந்த் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?
சமாதானம்
சில தினங்களுக்கு முன்பு வரை பாமக மேல் போட்டிக் கொண்டு தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து, ஒருவழியாக சமாதானம் செய்யப்பட்டது. இருந்தாலும் இரு தலைவர்களின் தொண்டர்களும் வட மாவட்டங்களில் ஒத்துழைப்பு தந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
விஜயகாந்த்
அதனை அறவே நீக்கத்தான் இன்று ராமதாஸ் நேரில் போய் விஜயகாந்த்தை சந்தித்திருக்கிறார். வழக்கமான காரணமாக, உடல்நிலை காரணம் சொல்லப்பட்டது என்றாலும், இந்த சந்திப்பினால் ரெண்டு பக்க தொண்டர்களும் மகிழ்ச்சியான முடிவுக்கு வந்துள்ளனர். நிறுவனர் ராமதாசும்தான்!
|
மென்மையானது
அதனால்தான் இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார், "இந்த உலகில் தண்ணீரை விட மென்மையானதும், வளைந்து கொடுக்கக்கூடியதும் எதுவும் கிடையாது. அதேநேரத்தில் ஆர்ப்பரித்து வரும் போது தண்ணீரைத் தடுக்க எதனாலும் முடியாது!- லாவோ சீ" என்று பதிவிட்டுள்ளார்.
வளைவது யார்?
வழக்கம்போல் சந்தேகம்தான்! வளைந்து கொடுப்பது என்று யாரை சொல்கிறார் டாக்டர்? 5 வருடமாக இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து இன்றைக்கு விஜயகாந்த் வீட்டுக்கே சென்று சந்தித்தை "வளைந்து கொடுப்பது" என்கிறாரா? அல்லது அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைக்க பாமக வளைந்து தருகிறது என்கிறாரா என்றுதான் புரியவில்லை. எப்படியோ.. பிரிந்தவர்கள் கூடினால் மகிழ்ச்சிதானே!