லோக்சபா தேர்தலில் கட்சி ஆள்மாறாட்டம் செய்த அந்த 4 பேர் எப்போ சிக்குவாங்க? ராமதாஸ் பொளேர்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் ஒரு கட்சியில் இருந்து கொண்டு இன்னொரு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட 4 பேர் எப்போது சிக்குவார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த ஜோசப் என்ற இடைத்தரகர் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இச்சம்பவங்களை சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி - இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர்.
ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு: செய்தி - இந்த 4 பேர் சிக்கிக் கொண்டனர். மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ?
— Dr S RAMADOSS (@drramadoss) September 28, 2019
மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து கொண்டு இன்னொரு கட்சியில் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து வெற்றி பெற்ற அந்த 4 பேர் எப்போது சிக்கப் போகிறார்களோ?
இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.