இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்
சென்னை: வஞ்சக வலையில் வீழ்த்தி இன்று மே 17-ல் கொல்லப்பட்ட தமிழீழ தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் ட்விட்டர் பதிவு:
இன்று மே 17. தமிழீழத் தீவு குருதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட நாள். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்ட நாள். வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு எமது வீர வணக்கங்கள்.
இலங்கை #இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கு காரணமான கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், ஈழத்தமிழர்களுக்கு தனித் #தமிழீழம் அமைத்துத் தருவதும் தான் பா.ம.க.வின் முதன்மை நோக்கங்கள். அவற்றை நிறைவேற்ற அனைத்து உலக அரங்குகளிலும் பா.ம.க. பாடுபடும்!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்வு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு