சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுப்பது குறித்தும், அந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த செல்களின் வீரியத்தை குறைப்பது குறித்தும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேனிபுலேட்டிவ் தெரபியின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், புற்றுநோயை இயற்கை மருத்துவம் மூலம் எப்படி தடுப்பது என்பது குறித்து பார்ப்போம். நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு வகை நோய்கள் இருந்தாலும் அதில் மிகவும் ஆபத்தை விளைக்கக் கூடிய நோய்களில் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவை ஆகும்.

ஆரம்பக் கட்டத்திலேயே வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் ஆரோக்கியம் மூலமாகவும் புற்றுநோயின் மேற்கொண்ட வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். அதோடு புற்றுநோய் வராமல் தடுக்கவும் நாம் சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதலில் பூண்டு குறித்து பார்ப்போம்.

அன்றாட உணவில் பூண்டு

அன்றாட உணவில் பூண்டு

பூண்டை அன்றாடம் சமையலில் சேர்த்துக் கொள்கிறோம். மிகவும் ஆபத்தான நோய்களான ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு ஆகிய நோய்களையே இந்த பூண்டு கட்டுப்படுத்தும். இந்த நோய் வந்தவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே இந்த பூண்டை கொடுத்து வரலாம். இதில் ஆலிசின் என்ற ஒரு பொருள் இருக்கிறது. இந்த பொருளானது புற்றுநோய் செல்களை அழித்து வழக்கமான செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். இந்த பூண்டை வைத்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வயிற்றில் வரக் கூடிய புற்றுநோயை தடுக்கிறது. அத்துடன் பூண்டு அதிகமாக எடுத்துக் கொள்வதால் புரோஸ்டேட் கேன்சர் வராமல் தடுக்கலாம்.

மஞ்சள் நிற காய்கறிகள்

மஞ்சள் நிற காய்கறிகள்

வெங்காயம், மஞ்சள் நிற காய்கறிகள், பச்சை நிற காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் குடலில் வரக் கூடிய புற்றுநோயை காலன் கார்சினோமா என்ற புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். இந்த பூண்டை சிறிதாக நறுக்கி சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் நாம் சேர்த்து கொள்வதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம். அடுத்தது தக்காளி, இந்த தக்காளியை நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்வோம். இதில் லைகோஃபின் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இதுதான் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இந்த தக்காளிக்கு கேன்சரை எதிர்க்கும் குணம் உண்டு. இது பல புற்றுநோய்களுக்கு முற்றுபுள்ளியை வைக்கும். இந்த லைகோஃபின் அதிகம் இருக்கக் கூடிய காய்கறிகள் , பழங்களை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இது புரோ ஸ்டேட் கேன்சர் வராமல் தடுக்கிறது.

சமையலில் மஞ்சள் தூள்

சமையலில் மஞ்சள் தூள்

அடுத்தது மஞ்சள் தூள். இதை நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்த நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இந்த மஞ்சளில் இருக்கக் கூடிய குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு கேன்சர் வராமல் தடுக்கிறது. இந்த மஞ்சள் குடலில் ஏற்படக் கூடிய புற்றுநோயை சீர் செய்யும். புற்றுநோய் செல்கள் பரவுதலையும் குறைக்கிறது. புற்றுநோய் செல்கள் வளர்ச்சிக்கு உதவும் என்சைம்களை மஞ்சள் அழிக்கும். அத்துடன் தலை மற்றும் கழுத்து பகுதியில் இருக்கும் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் கேன்சர், நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு மிளகையும் சேர்த்து குடித்து வந்தால் கேன்சர் செல்களின் வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்தலாம்.

காலிஃபிளவர்

காலிஃபிளவர்

அடுத்தது புரொகோலி, இது காலிஃபிளவர் குடும்பத்தை சேர்ந்தது. கோஸ், காலிஃபிளவர், நூல்கோல் ஆகியவற்றில் சல்ஃபோரேபேன் (Sulforaphane) இருக்கிறது. இந்த பொருளுக்கு புற்றுநோயை தடுக்கும் குணம் அதிகமாகவே இருக்கும். மார்புக புற்றுநோய் செல்களின் அளவையும் எண்ணிக்கையையும் குறைக்கிறது. புரோகோலியை அதிகமாக எடுத்துக் கொள்வதால் குடலில் வரக் கூடிய கோலோ ரெக்டல் கார்சினோமாவை தடுக்கலாம். இதை சமைத்தும் சாப்பிடலாம், இல்லாவிட்டால் லேசாக வேக வைத்து இதை சாலட்டுகளில் போட்டும் சாப்பிடலாம்.

பீட்டாகரோட்டின்

பீட்டாகரோட்டின்

அடுத்தது கேரட், இதில் பீட்டாகரோட்டின் இருக்கிறது. இது வயிற்றில் வரக் கூடிய கேன்சரை தடுக்கும். இதை பச்சையாகவே சாப்பிடலாம். இதை தினந்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலமாக நுரையீரல் கேன்சரை தடுக்கலாம். சிகரெட் பிடிப்போர் இதை எடுத்துக் கொண்டால் நுரையீரலில் ஏற்படக் கூடிய தொற்றையும் இது தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் பயன்படுகிறது. அடுத்தது பீன்ஸ், அவரைக்காய்- இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. குடலில் எந்த அழுக்கும் தங்காமல் அதை சுத்தமாக வெளியேற்றும். இதனால் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதை சமைத்து எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கக் கூடிய நார்ச்சத்துதான் நமக்கு மிகப் பெரிய பாதுகாப்பு.

நச்சுத் தன்மை

நச்சுத் தன்மை

அடுத்தது பட்டை, இது நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். புற்றுநோயாளிக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்தால் கேன்சர் செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அந்த செல்களின் பரவலும் அதிகமாக இருக்கும். பட்டையை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சரியாக வைத்துக் கொள்ள உதவும். இதனால் அந்த கேன்சர் செல்கள் அதிகமாக பரவுவதை தடுத்து அதை அழிக்க உதவும். ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் பட்டை பவுடரை போட்டு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

உலர் கொட்டைகளின் பயன்கள்

உலர் கொட்டைகளின் பயன்கள்

அடுத்தது உலர் கொட்டைகள், எந்த வகை கேன்சராக இருந்தாலும் அவர்கள் இந்த உலர் கொட்டைகளை எடுத்துக் கொண்டால் ஆபத்தை குறைக்கும். பி 17+ ரெஸ்வெராட்ரோல் எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் எந்த புற்றுநோயாக இருந்தாலும் அதனால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். இந்த கொட்டைகளில் செலீனியம் இருக்கிறது. இது நுரையீரலுக்கு பாதுகாப்பாக இருக்கும். நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு செலீனியத்தின் அளவு குறைவாகவே இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் அதாவது என்டோமெட்ரியல் கேன்சர்கள். இது கருமுட்டை, கருக்குழாய் என எதில் வேண்டுமானாலும் ஏற்படக் கூடிய புற்றுநோயை தடுக்க இந்த கொட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கணைய புற்றுநோயையும் இது தடுக்கிறது. வால்நட், பாதாம், பிஸ்தா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும்போது மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணைய புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.

ஆரஞ்ச், நெல்லிக்காய்

ஆரஞ்ச், நெல்லிக்காய்

அடுத்தது விட்டமின் சி அதிகமாக இருக்கக் கூடிய பழங்களை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்ச்,நெல்லிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதை நாம் சாப்பிடுவதன் மூலமாக கேன்சரின் ரிஸ்க்கை நாம் குறைக்கிறோம். விட்டமின் சி அதிகமாக கிடைப்பதால் நம் உடலை நன்றாக சுத்தப்படுத்துகிறது. கேன்சர் செல்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். கேன்சர் நோயாளிகளின் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நுரையீரல் சுவாச பாதை சீராக இருக்கும். கணைய புற்றுநோயை கூட குறைக்கும். விட்டமின் சி அதிகமாக எடுத்துக் கொண்டால்தான் இரும்பு சத்து அதிகமாக இருக்கும். இதனால் நம் உடலில் தேவையற்ற கேன்சர் செல்களை எடுத்து போராடக் கூடிய தன்மை நம் உடல் செல்களுக்கு ஏற்படும்.

ஆளி விதைகளில் என்ன?

ஆளி விதைகளில் என்ன?

அடுத்தது, ஆளிவிதைகள் (பிளக்சீட்ஸ்), இதில் ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. தேவையான கொழுப்புச் சத்தை கொடுப்பதன் மூலமாகவும் இதில் உள்ள நார்சத்தை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் இதயம் எந்த ஒரு தடையும் இல்லாமல் சீராக செயல்பட இது உதவுகிறது. ஆளிவிதையையும் சோம்பையும் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு பிஞ்ச் ஓமம் சேர்த்து கொடுத்து வந்தால் கேன்சர் செல்களின் வளர்ச்சி குறையும். சேன்சர் செல்களின் அழிவிற்கும் இது ஒரு காரணமாகவே இருக்கும். மார்பக புற்றுநோய் இருக்கும் பெண்களுக்கு இதை கொடுப்பதன் மூலம் புற்றுநோயின் வீரியத்தை இது குறைக்கிறது. புரோஸ்டேட், குடல் புற்றுநோய்க்கும் இது உதவுகிறது. இது போல் உணவு முறைகளை நாம் எடுத்துக் கொள்வதால் கேன்சர் செல்களை அழிக்கலாம், குறைக்கலாம், நோய் வராமல் தடுக்கலாம்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

அடுத்தது மலச்சிக்கல் வராமல் தடுக்க வேண்டும். அதற்காக தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். பழச்சாறுகளையும் எடுக்க வேண்டும். கீரைகளையும் எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அடுத்தது கோதுமை புல் (Wheat Grass juice) சாறு, இதில் குளோரோஃபில் இருக்கிறது. இதை ஜூஸ் போட்டு காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொண்டால் கேன்சர் பாதுகாப்புக்கு சிறந்தது. நம் உடலை நன்றாக சுத்தப்படுத்தும். குளோரோஃபில் நமது உடலில் உள்ள ரத்த செல்களின் அளவை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதால் தேவையற்ற கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். இந்த கோதுமை புல்லை தண்ணீர் விட்டு ஜூஸ்போட்டு அதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம். அந்த ஜூஸுடன் தேங்காய் பால் சேர்த்தும் குடிக்கலாம்.

 அருகம்புல்லை குடித்தால் என்ன நன்மை

அருகம்புல்லை குடித்தால் என்ன நன்மை

அடுத்தது அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நம் உடல் சுத்தமாகும். கல்லீரல், கால் பிளேடர் (Gall Bladder) ஆகியவற்றில் உள்ள அழுக்கை நீக்கும். நமது உடலின் அமிலத் தன்மையை குறைக்கும். அமிலத் தன்மை ஏற்பட்டால் நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். எந்த நோயிலிருந்து குணமடையவும் இந்த சாறு உதவும். இதை எடுத்துக் கொள்வதால் நமது சிறுநீரகங்கள் வலுவடையும். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே ஆரம்ப காலத்திலேயே இந்த புற்றுநோய்களை நாம் அழிக்கலாம். திடீர் உடல் எடை குறைதல், உடலில் ஏதோ ஒரு பகுதியில் அதிக வலி ஏற்படுதல், தினசரி செயல்பாட்டில் வித்தியாசப்படுதல், சோர்வாக இருத்தல், வயிற்று வலி, இடுப்பு வலி, மார்பகம் பலுவாக இருத்தல், மாதவிடாய் திடீரென அதிகமாக போதல், திடீரென உதிரம் கட்டி கட்டியாக போதல் இது போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பே நாம் மலச்சிக்கல் வராமல் தடுத்தால் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம். ஆரம்ப கட்டத்திலேயே கேன்சர் வருவதற்கான சின்ன அறிகுறி கண்டிப்பாக தெரியும் என்றார் டாக்டர் தீபா.

English summary
Government Yoga and Naturopathy hospital Manipulative theraphy HOD Dr Y Deepa says about cancer and how to control the cancer cells using regular diet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X