அரசு பஸ் கண்ணாடியை நொறுக்கிய குடி மகன்... காரணம் என்ன தெரியுமா
அரசு பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கியிருக்கிறார் ஒரு குடிமகன். காரணம் என்ன தெரியுமா டாஸ்மாக் முன்பாக நிறுத்தாத காரணத்தால் பொது சொத்தை சேதப்படுத்தியிருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் மது குடிப்பவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆசாமி ஒருவர், பெரிய கல் ஒன்றை எடுத்து எரிந்து கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தடம் எண் 55 ஏ அரசுப்பேருந்து பல்லாவரத்தில் இருந்து பழந்தாண்டலம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. இன்றைய தினம் அந்த பேருந்தை இயக்கிய டிரைவருக்கு தெரியாது பஸ் கண்ணாடி உடைபடும் என்று. திருமுடிவாக்கம் அருகே சென்ற போது குடி போதையில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று பேருந்தை நிறுத்த சொல்லி அடம் பிடித்தார்.
தொடையில் கரும்பை அசால்டாக உடைத்து... பொங்கல் கொண்டாடிய மன்சூர் அலிகான்
டிரைவர் நிறுத்தாமல் போக முயற்சி செய்யவே, பெரிய கல் ஒன்றை எடுத்தால், அதை பேருந்தின் கண்ணாடி மீது வீசி எறிந்தார். அவ்வளவுதான் பஸ் கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது. பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகளும் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தை எதிரே டீக்கடையில் இருந்த நபர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.