சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனமழை எதிரொலி.. நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு!

கனமழை காரணமாக தற்போது நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    weather update | தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்

    சென்னை: கனமழை காரணமாக தற்போது நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு சாலை முழுக்க அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய மழை இப்போதும் விடாமல் பெய்து வருகிறது.

    Due to Heavy rain School will remain closed in Nagappttinam today

    அதிகாலையிலிருந்து செம மழை.. டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சி.. சென்னைக்கும் மழை இருக்கு!அதிகாலையிலிருந்து செம மழை.. டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சி.. சென்னைக்கும் மழை இருக்கு!

    நாகப்பட்டினத்தில் நாகூர், மயிலாடுதுறை , ஆடுதுறை, குத்தலாம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது நாகப்பட்டினத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Due to Heavy rain School will remain closed in Nagappttinam today - Collector.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X