சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பலமான காற்று வீச போகிறது.. சென்னைக்கு மிக அருகில்.. மீனவர்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை தாக்க போகும் நிவர் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நிவர் புயல் முன்னெச்சரிக்கை.. கடலூருக்கு சென்ற பேரிடர் மீட்பு படை..!

    வங்கக்கடலில் உருவாக உள்ள நிவர் புயல் தமிழகத்தை வரும் 25ம் தேதி தாக்க உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்த இந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

    இன்னும் 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு 25ம் தேதி ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நிவர்.. 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு.. சென்னையில் மிக கன மழை பெய்யும்நிவர்.. 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு.. சென்னையில் மிக கன மழை பெய்யும்

    எப்படி

    எப்படி

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு மிக அருகில்தான் இருக்கிறது. சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. இது தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.

    கடலோர மாவட்டங்கள்

    கடலோர மாவட்டங்கள்

    இந்த புயல் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே கரையை கடப்பதால் கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் எல்லாம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.

    மீனவர்கள்

    மீனவர்கள்

    வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் வரும் 26ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25ம் தேதி புயல் கரையை கடக்கிறது. ஆனால் 26ம் தேதியும் கடுமையான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே 26ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர்

    கடலூர்

    சென்னைக்கு மிக அருகே நிவர் புயல் உருவாகி வருவதால் சென்னை மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் இன்றில் இருந்தே காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர மாவட்டங்கள்

    கடலோர மாவட்டங்கள்

    கடலோர மாவட்டங்களில் இன்று 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் அன்று புயலின் வலிமையை பொறுத்து காற்றின் வேகம் 90 கிமீ அளவிற்கு கூட செல்ல வாய்ப்புள்ளது. இதன் கடலோர மாவட்டங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்பு படை தீவிரமாக முயன்று வருகிறது.

    English summary
    Due to Nivar cyclone, Heavy Storm expected in coastal areas in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X