எல்லாம் கூடி வந்துள்ளது.. நிவர் புயல் விட்டு சென்ற ஒரே நல்ல விஷயம்..சென்னைக்கு மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் அடுத்த வருடம் முழுக்க குடிநீர் பிரச்சனையே இருக்காது என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழகத்தில் விடமால் மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வடமாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை பெய்தது.
உருவாகும் காற்றழுத்தம்.. இன்னும் 3 நாளில் அடுத்த புயல்.. பெயர் என்ன தெரியுமா?
சென்னை
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருக்கும் சாலைகளில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு, கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது. இந்த பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது.
ஏரிகள்
வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் இரண்டின் காரணமாக சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளது. சென்னையில் இருக்கும் சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் எல்லாம் நீர் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. அதிலும் செம்பரம்பாக்கத்தில் நீர் வெளியேற்றப்பட்ட பின்பும் கூட 22 கனஅடிக்கு தண்ணீர் உள்ளது.
வெள்ளம் இல்லை
செம்பரம்பாக்கத்தில் நீர் வெளியேற்றப்பட்ட பின் வெள்ளம் ஏற்படவில்லை. தற்போது சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாமே நிரம்பி உள்ளதால் அடுத்த ஒரு வருடம் முழுக்க தண்ணீர் பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் எல்லாம் நிரம்பி உள்ளது. இதில்
தண்ணீர் பஞ்சம்
சென்னையின் குடிநீர் தேவையில் 35-40 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளது. இதனால் அடுத்த வருடம் கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சமே இருக்காது. குடிநீர் தேவை அடுத்த வருடம் ஜூலை இருக்காது என்று கூறுகிறார்கள்.