சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்.. கண்ணீர் விட்ட துர்கா.. அப்படியே, நெகிழ்ந்துபோன ஆளுநர் மாளிகை

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வராக முக ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்தபோது அவரது மனைவி, துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

Recommended Video

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் | ஆனந்த கண்ணீர் வடித்த Stalin மனைவி

    நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

    TN CM MK Stalin: திமுக இளைஞர் குழு தொடங்கி முத்துவேல் கருணாநிதி மு.க ஸ்டாலின் எனும் நான் வரை TN CM MK Stalin: திமுக இளைஞர் குழு தொடங்கி முத்துவேல் கருணாநிதி மு.க ஸ்டாலின் எனும் நான் வரை

    1996 ம் ஆண்டுக்கு பிறகு திமுக முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று உள்ளது. அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலம் தேவை இல்லாமல் அறுதி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது திமுக.

    ஸ்டாலின் அமைச்சரவை

    ஸ்டாலின் அமைச்சரவை

    இந்த நிலையில்தான் இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஸ்டாலின் உள்ளிட்ட 34 பேர் இதில் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று கூறி ஸ்டாலின் பதவியேற்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

    கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்

    கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்

    ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழாவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மற்றும் பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தாரும் பங்கேற்றிருந்தனர். பதவியேற்புக்கு முன்பாக, அவர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் விஐபிகள் வரிசையில் உட்கார்ந்து இருந்த துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் தன் கைகளால் கண்களை துடைத்துக் கொண்டார். ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்பதால், அவரது மனைவி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்ததைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர் வழிபாடுகள்

    தொடர் வழிபாடுகள்

    கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடவுள் மறுப்பாளர்களாக அறியப்பட்டாலும் துர்கா ஸ்டாலின் மிகுந்த தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு கோவில்களுக்கும் சென்று அவர் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்தார். ஸ்டாலின் எப்படியாவது தமிழக முதல்வர் ஆகிவிட வேண்டும் என்பது துர்கா ஸ்டாலின் வேண்டுதல்களில் ஈடுபடுகிறார் என்று செய்திகள் பரப்பப்படும் அளவுக்கு அவர் அவ்வப்போது வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் துர்கா கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்கமுடிந்தது.

     பதவியேற்பு விழா

    பதவியேற்பு விழா

    ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில், திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், நேரலை ஒளிபரப்பில் பதவி ஏற்பு விழாவை பார்க்குமாறும் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தக்க சமூக இடைவெளியை கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Durga Stalin eyes filled with tears when MK Stalin swearing in as chief minister of Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X