சென்னை முகப்பேர் அமிர்தவர்ஷினி குடியிருப்பில் தசரா விழா கோலாகல கொண்டாட்டம்
சென்னை: முகப்பேர் மேற்கில் உள்ள அமிர்தவர்ஷினி குடியிருப்பில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முகப்பேர் மேற்கில் உள்ளது அமிர்தவர்ஷினி அடுக்ககம். இங்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என 4 பிளாக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 30 வீடுகள் வீதம் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. குடியிருப்பு முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.
இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உடற்பயிற்சி உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புச் சங்கம் பொங்கல், தீபாவளி, தசரா, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தமிழ், ஆங்கில புத்தாண்டு ஆகியவற்றை கொண்டாடி வருகிறது.
நிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா?
குழந்தைகளுக்கு இனிப்பு
குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழாக்களின் போதும் குடியிருப்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக குழந்தைகள், பெரியோர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகளும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
கொலு பொம்மைகள்
கடந்த அமாவாசை நாளன்று பொம்மை கொலு வைக்கும் வைபவம் தொடங்கப்பட்டது. இதன்படி அமிர்தவர்ஷினி அடுக்ககத்திலும் சில வீடுகளில் பொம்மை கொலு காட்சிப்படுத்தப்பட்டன. கொலு வைக்கப்பட்ட வீடுகளில் குழந்தைகள் பாட்டு பாடினர்.
குடியிருப்பில் ஆயுத பூஜை
குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்றைய தினம் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்க அலுவலகத்தில் பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கவனித்துக் கொண்டனர்.
கேரள மக்களுக்கு உதவிக்கரம்
குடியிருப்பு நலச் சங்கம் வெறும் விழாக்களை நடத்துவதோடு சுகாதாரத்தை பேணி காப்பதிலும் உதவிக்கரம் நீட்டுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த மாதம் கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்த போது குடியிருப்பு சார்பாக நலத்திட்ட உதவிகள் திரட்டப்பட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கப்பட்டன. பாதாள சாக்கடை திட்டத்தை துரிதப்படுத்தவும் இச்சங்கம் வலியுறுத்தி வருகிறது.