லாக்டவுன் தளர்வுகள்.. செப் 8-இல் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
சென்னை: லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 8ஆம் கட்ட ஊரடங்கு இந்த மாதம் வரை தொடர்கிறது. மேலும் பொது போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் செப்டம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கில் ஏற்கெனவே தளர்வுகள் அறிவித்த நிலையில் கூடுதல் தளர்வுகள் பற்றி ஆலோசிக்கலாம் என தெரிகிறது.
கொரோனா லாக்டவுன் தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை தயார்படுத்துவது குறித்தும் அதை தடுப்பதும் குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.