நான் பெரிய தொழிலதிபர் கிடையாது.. ஒரு விவசாயி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Recommended Video
சென்னை: நான் தொழிலதிபர் இல்லை, விவசாயி என்றும் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கியுள்ளார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி.
நான் நேரில் சென்று அழைத்தால்தான் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருவார்கள் என்றார். சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர் முதலில் லண்டன் செல்கிறார்.
இது எழுத்து யுத்தம்.. இனி சண்டை செஞ்சே ஆகணும்.. சோசியல் மீடியாவில் திமுக-பாஜக மோதல் பகீர் பின்னணி
அங்கு மருத்துவத் துறையின் பணித்தரத்தை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.