சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாவட்டம் விட்டு மாவட்டம் ஓகே.. மாநிலம் விட்டு மாநிலம் எப்போது பேருந்து?.. முதல்வர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று குறைந்த பிறகே மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி சிறு, குறு தொழிற்சாலை பிரதிநிதிகள் விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநில அரசு கொரோனாவை தடுக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.

கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!! கோவாக்சின்... குரங்கு பரிசோதனையில்... அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி... முழு வெற்றி!!

அறிகுறி

அறிகுறி

நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அந்த பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய் தொற்று

நோய் தொற்று

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்ல முறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

இருப்பினும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி அமைப்பதுதான் அரசின் கடமை. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க சுகாதாரத் துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி

மருத்துவக் கல்லூரி

அனுமதி கிடைத்ததும் காஞ்சிபுரத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். காஞ்சிபுரம் ஜரிகை இங்கேயே வாங்க வழிவகை செய்யப்படும். காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பஸ் நிலையம், காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

English summary
CM Edappadi Palanisamy says that transportation between states will start after Corona infection reduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X