குழந்தைகள் தின விழா.. அம்மா உணவகத்தில் இட்லியை சாப்பிட்ட முதல்வர்
Recommended Video
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேரில் சென்று அங்கு அமைச்சர்களுடன் சேர்ந்து இட்லியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவைத்தார்.
இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு சென்றனர்.
அப்போது அம்மா உணவகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அமைச்சர்களுடன் அங்கு விற்பனையாகும் இட்லியை வாங்கி சாப்பிட்டு பார்த்தார்.
[ஜெயலலிதா இறந்ததற்கு "அது" காரணமல்ல.. அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம்]
தொடர்ந்து உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கூறிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.