1 மணி நேரம்.. சல்லடை போட்டு சோதனை.. கலாநிதி வீராசாமியிடம் தேர்தல் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!
நேற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: நேற்று திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர்களில் இவர் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் கலாநிதி வீராசாமி தேர்தலை முன்னிட்டு நேற்று தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். முக்கியமாக வடசென்னை நாடாளுமன்ற பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.
அவர் பிரச்சாரம் முடித்துவிட்டு இரவு திரும்பும் போது, தேர்தல் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவரது வாகனம் சோதனை செய்யப்பட்டது.
மோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ
காரின் கதவு, டிக்கி, காரின் அடிப்பகுதி என்று அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் பணமோ, நகையோ சிக்காததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து கலாநிதி வீராசாமியின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்தவர்களின் வாகனங்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.