கனிமொழிக்காக களப்பணியாற்றும் அனிதா ராதாகிருஷ்ணன்.. நள்ளிரவில் வீட்டுக்கு வந்த தேர்தல் பறக்கும் படை
Recommended Video
சென்னை: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான திமுக தலைவராகும். தற்போது கனிமொழி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுவதால் அவருடன், தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன், வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததாக கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு தண்டுபத்து பகுதியிலுள்ள அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டுக்கு சோதனையிட சென்றனர்.
தொடர்ந்து ரெய்டில் சிக்கும் கதிர் ஆனந்த்.. மூட்டை மூட்டையாக மாட்டிய பணம்?.. சிக்கலில் துரைமுருகன்?
அப்போது போதிய வெளிச்சம் இல்லை என்பதால், திரும்பி சென்ற அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை மீண்டும் வருவதாக கூறியுள்ளனர். இதனால் தண்டுபத்து பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட உடன்குடி அருகேயுள்ள கிராமம்தான் தண்டுபத்து. தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், இந்த கிராமத்திலும் கூட பறக்கும்படை சோதனையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், எனது வீட்டில் வருமான வரி ரெய்டு, அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் பறக்கும்படை ரெய்டு. இப்படியெல்லாம் செய்தால், மக்கள் மனநிலை எப்படி மாறும் என்ற அடிப்படை அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.