ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 12 அமைச்சர்கள் -19 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட டீமை களமிறக்கிய திமுக!
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி 12 அமைச்சர்கள் 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை களமிறக்கியுள்ளது திமுக தலைமை.
தேர்தல் ஸ்பெலிஸ்ட்கள் என திமுகவினரால் வர்ணிக்கப்படும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் அந்த தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் சற்று ஆக்டிவாக இயங்கக்கூடிய ஐ.பி.செந்தில்குமார், ராஜேஷ்குமார் எம்.பி., மதுரா செந்தில், கே.மதியழகன் என 19 மாவட்டச் செயலாளர்களையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு திமுக தலைமை நியமித்துள்ளது.
பெரியார் வீட்டு பேரன்.. சொல்லின் செல்வனின் மகன்! ஈரோட்டில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன்! யார் இவர்
இது தொடர்பாக திமுக தலைமை விடுத்துள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 2023 ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு
தலைமைக் கழக அறிவிப்பு
நடைபெறவிருக்கின்ற ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழு
கே.என். நேரு
எஸ். முத்துசாமி
எ.வ. வேலு
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்
தங்கம் தென்னரசு
தா.மோ. அன்பரசன்
அர. சக்கரபாணி
மு.பெ.சாமிநாதன்
வி. செந்தில்பாலாஜி
ஆவடி சா.மு. நாசர்
மதிவேந்தன்
கயல்விழி செல்வராஜ்
அந்தியூர் செல்வராஜ்
கோவை நா. கார்த்திக்
தளபதி முருகேசன்
தொ.அ. ரவி
க. வசந்தம் கார்த்திகேயன்
தா. உதயசூரியன்
சேலம் ஆர். ராஜேந்திரன் டி.எம். செல்வகணபதி
எஸ்.ஆர். சிவலிங்கம்
என். நல்லசிவம்
இல. பத்மநாபன்
பா.மு. முபாரக்
தே.மதியழகன்
கே.ஆர்.என். ராஜேஸ்குமார்
எஸ்.எம். மதுரா செந்தில்
திருப்பூர் செல்வராஜ்
பெ. பழனியப்பன்
ஒய். பிரகாஷ்
ஐ.பி. செந்தில்குமார்
தடங்கம் சுப்ரமணி
இவ்வாறு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இனி வரும் நாட்களில் இன்னும் ஓரிருவரது பெயர்கள் இணைக்கப்படும் எனத் தெரிகிறது.