"தேன்மொழி பேசமாட்டியா.. கடைசிவரை பேசாமலேயே உயிரைவிட்ட சுரேந்தர்!
காதலியை அரிவாளால் வெட்டிய காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: "தேன்மொழி பேசமாட்டியா.. பேசமாட்டியா" என்று கேட்டு கத்தியால் காதலியை குத்திய இளைஞர் தற்கொலையும் செய்து கொள்ள முயன்றார். ஆனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். எனினும் இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், சுரேந்தரிடம் பேசுவதை தேன்மொழி தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர், கடந்த 14 ந்தேதி சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழியிடம் தகராறு செய்ததுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்து பயந்து விட்ட சுரேந்தரும், ரயிலின் முன்விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
படுகாயம்
ஆனால் தேன்மொழி, சுரேந்தர் இருவருமே படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடினர். இவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தேன்மொழியை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சுரேந்தரை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர்.
தையல்
இருவருக்கும் தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது. தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டதால், தையல் போடப்பட்டுள்ளது. மேலும் 10 நாளுக்கு பேசவே கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
விசாரணை
அதேபோல, சுரேந்தருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ரயிலில் விழுந்தது முதல், அவருக்கு சுயநினைவே இல்லை. இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு கொண்டே வந்தது.
சுயநினைவு
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேந்தர் உயிரிழந்தார். தேன்மொழியை ஏன் கொலை செய்ய முயற்சிக்க வேண்டும், இருவருக்கும் என்னதான் தகராறு நடந்தது, என்ற விவரத்தை அறியவே முடியவில்லை.. சுயநினைவு இல்லாமலேயே சுரேந்தருக்கு உயிரும் பிரிந்து விட்டது!