ராகுல் அவசர அழைப்பு.. டெல்லி விரைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. என்ன நடக்க போகுதோ!
ராகுலை சந்திக்க டெல்லி சென்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்த காரணத்தினால் அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதனால் ஒவ்வொரு கோஷ்டியாக டெல்லி சென்று ராகுலிடம் கோரிக்கை வைத்து விட்டு வந்தனர்.
ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல் பரபரப்பில் ராகுல் தீவிர கவனம் செலுத்தி வந்ததால், இந்த பிரச்சனை குறித்து உடனடியாக அவரால் பேச முடியவில்லை. தற்போது 5 மாநிலங்களிலும் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. அதனால் ராகுல் டெல்லி திரும்பி உள்ளார்.
தற்போது, மாநில கட்சி விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில்தான் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு, ராகுல்காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. எனவே இந்த அழைப்பினை ஏற்று, இன்று காலை இளங்கோவன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
இளங்கோவன் டெல்லி சென்றுள்ளதால் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழக காங்கிரஸ் வட்டாரம் பரபரப்புடன் காணப்படுகிறது.