ஈவிபி பொழுது போக்கு பூங்கா விபத்துகளில் இதுவரை 7 பேர் பலி
Recommended Video
சென்னை: சென்னை அருகே உள்ள ஈவிபி பொழுது போக்கு பூங்காவில் இதுவரை நடைபெற்ற விபத்துகளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை அருகே பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் 2012-ம் ஆண்டு ஈவிபி பொழுது போக்கு பூங்கா திறக்கப்பட்டது. தற்போது இது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டுள்ளது.
ஈவிபி பொழுது போக்கு பூங்காவாக செயல்பட்டது முதல் தற்போது வரை இங்கு நடந்த விபத்துகள் விவரம்:
- ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து அபியாமெக் என்ற விமான பணிப்பெண் பலியானார்.
- விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்றார்
- ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பில் வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியும் மற்றொரு தொழிலாளர் மாடியில் இருந்து கீழே விழுந்தும் இறந்தார்.
- விஜய் நடித்த பிகில் படத்தின் படப்பிடிப்பின் போதும் கிரேன் அறுந்து கீழே விழுந்ததில் செல்வராஜ் என்பவர் பலியானார்.
- தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பிலும் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.