சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்று! இன்று! நாளை..! சசிகலா நீக்கத்தில் என்றும் ஒரே நிலை தான்! OPS-க்கு ஜெயக்குமார் பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எப்போதும் இடமில்லை. நேற்று- இன்று- நாளை என சசிகலா நீக்கத்தில் ஒரே நிலைதான் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ஓபிஎஸ் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு.

அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கொளுத்திபோட்ட சசிகலா.. வெடித்து சிதறும் நிர்வாகிகள்.. மாறுபட்ட கருத்தால் சிக்கலில் அதிமுக! கொளுத்திபோட்ட சசிகலா.. வெடித்து சிதறும் நிர்வாகிகள்.. மாறுபட்ட கருத்தால் சிக்கலில் அதிமுக!

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என கூறி வரும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் சசிகலாவை ஆதரித்து கூறியது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சசிகலா குறித்து கட்சியின் சில மூத்த தலைவர்களான செல்லூர் ராஜு, ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர்.

கே பி முனுசாமி

கே பி முனுசாமி

ஆனால் ஜெயக்குமார், ஆதி ராஜாராம், கே பி முனுசாமி உள்ளிட்டோர் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு எதிராக பேசிய ஓபிஎஸ் திடீரென மதுரையில் ஆதரவாக பேசியதை அடுத்து அன்றைய தினமே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என கூறியவரே ஓபிஎஸ்தான் என விமர்சனம் செய்தார்.

பதிலுக்கு பதில்

பதிலுக்கு பதில்

இப்படியாக ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் பதிலடி கொடுப்பதும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலடி கொடுப்பதும் நடந்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சசிகலா ஆதரவு கருத்து சொன்ன ஓபிஎஸ்ஸும் எதிர்ப்பு கருத்து சொன்ன எடப்பாடி பழனிச்சாமியும் மவுனம் காத்து வருகிறார்கள்.

Recommended Video

    சசிகலா விவகாரத்தில் OPS சொன்னதில் தவறு என்ன இருக்கு?- செல்லூர் ராஜு
    முன்னாள் அமைச்சர்

    முன்னாள் அமைச்சர்

    இந்த நிலையில் ராயபுரத்தில் இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்றைக்கும் இடமில்லை.

    எப்போதும் ஒரே நிலைதான்

    எப்போதும் ஒரே நிலைதான்

    நேற்று- இன்று- நாளை என சசிகலா நீக்கத்தில் ஒரே நிலைதான். அதிமுக எஃகு கோட்டை, எந்த கரையானாலும் அதை அரிக்க முடியாது என்றார் ஜெயக்குமார். இப்படியாக சசிகலா விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இனி என்ன நடக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.

    English summary
    Ex minister D.Jayakumar says that there is no place for Sasikala. We always stand the same decision which was taken by General Council meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X