சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதில் சலுகை.. கால அவகாசமும் நீட்டிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த வரும் மே 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் ஏப் 30 வரை மின் கட்டணம் செலுத்த கால கெடு உள்ளவர்களுக்கு இந்த கால நீட்டிப்பு அளிக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொரோனா வைரஸ் தொற்று பரவுதலால் 24.3.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியன் காரணமாக தழ்வலுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டார்களின் மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் 25.3.2020 முதல் 14.04.2020 வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு/ மறு இணைப்புக் கட்டணமின்றி 14.04.2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.

Extension of time to pay electricity bills in Tamil Nadu

தற்போது தமிழ்நாடு அரசு 30.04.2020 வரையிலான காலத்திற்கு ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 30.04.2020க் பிறகு மின் கட்டணம் செலுத்த வரும் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் அறிவிப்புகள் பின்வருமாறு:

தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் 25.3.2020 முதல் 30.4.2020வரை இருக்குமாயின் அத்தொகையினை செலுத்த 08.5.2020 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 ஆகிய மாதங்களில் 22.03.2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் அதற்கு முந்தைய கணக்கீட்டின் படி மின் கட்டணம் செலுத்தலாம் இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரி கட்டல் செய்யப்படும் எனதெரிவிக்கப்படுகிறது. (அதாவது ஜனவடிர 2020 பிப்வரி 2020 அல்லது மார்ச் 2020 ஆகீய மாதங்களில் செலுத்திய தொகையையே மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020க்கு மின் கட்டணமாக செலுத்தலாம்)

மேலும் ஏற்கனவே பயனீட்டாளர்களுககு வழங்கியுள்ள இணையதள வழி மூலம் வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத் மின் பயனீட்டார்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொக்றிது" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Extension of time to pay electricity bills in Tamil Nadu, The deadline is set for May 6
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X