சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 12 மணி நேரம் கவனம்.. அதி தீவிர கனமழை பெய்யும்.. தூத்துக்குடிக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி தீவிர மிககனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

Recommended Video

    தூத்துக்குடியில் கொட்டித் தீர்க்கும் கனமழையிலும் கடமை தவறாது பணி செய்யும் போக்குவரத்து காவலர் - வீடியோ

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை சூடு பிடித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்த நிலையில், இன்று மாலை நேரத்தில் கனமழை பெய்தது. அதேபோல் தென் மாவட்டங்களிலும் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

    யாராவது உதவுங்க.. கருப்பன் குசும்பன் புகழ் நடிகரின் உருக்கமான கோரிக்கை.. திமுக எம்எல்ஏ இலவச சிகிச்சையாராவது உதவுங்க.. கருப்பன் குசும்பன் புகழ் நடிகரின் உருக்கமான கோரிக்கை.. திமுக எம்எல்ஏ இலவச சிகிச்சை

    மழை

    மழை

    இந்த நிலையில் தூத்துக்குடியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதி தீவிர மிககனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட மழை அதிகமாக இருக்கும். காற்று மிகவும் வேகமாக வீசும், இடி மின்னல் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இந்த நிலையில் தூத்துக்குடிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

    நாளை

    நாளை

    நாளை காலை 8.30 மணி வரை அதி தீவிர மிக கனமழை பெய்யும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று எப்படி

    இன்று எப்படி

    நேற்றுதான் தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடியில் இன்று மாலை வரை மொத்தமாக 18 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    தூத்துக்குடி மட்டுமின்றி கன்னியாகுமரி, நெல்லை போன்ற அண்டை மாவட்டங்களிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்கு வேகமாக காற்றும் வீசி வருவதால் இன்று பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால்.. மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Extremely Heavy rain forecasted for Tuticorin for the next 12 hours by IMD.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X