ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்
Recommended Video
சென்னை: ஜோதிடர் மீதான அதீத நம்பிக்கை வைத்து கொலையாளியாகி ஆயுள் தண்டனையும் பெற்று சிறைவாசத்துடன் மரணித்துப் போய்விட்டார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.
1980களில் இருந்து இன்று வரை சைவ உணவுகளில் தனித்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது சென்னை சரவணபவன். ஹோட்டல் தொழிலில் உச்சத்தைத் தொட்ட அதன் உரிமையாளரான ராஜகோபாலுக்கு பேராசை விடவில்லை.
வைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்
ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை
தமது வாழ்க்கையை மேலும் வளமாக்கிக் கொள்ள ஜோதிடர்களை நம்பினார்... ஜோதிடத்திடம் தம்மையே ஒப்படைத்துக் கொண்டார். ஜோதிடர்கள் எதை சொன்னாலும் செய்ய தயங்காதவராக இருந்தார் ராஜகோபால்.
ஜீவஜோதியை திருமணம் செய்ய முயற்சி
இதனால் 3-வது திருமணத்துக்கும் தயாரானார் ராஜகோபால். அதுவும் தமது ஓட்டல் மேலாளர் ஒருவரின் மகளான ஜீவஜோதியை 3-ம் திருமணம் செய்ய முயற்சித்தார். ஆனால் ஜீவஜோதி இதற்கு உடன்படவில்லை.
கொலையாளியானார் ராஜகோபால்
தாம் காதலித்த பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ராஜகோபால் சாந்தகுமாரை கொலை செய்து கொலையாளியானார். ஊடகங்கள் பக்கம் பக்கமாக ராஜகோபாலின் திருவிளையாடல்களை எழுதி தீர்த்தன.
ஆயுள் கைதியாக மரணம்
ஜோதிடத்தால் புத்தி மாறி போய் கொலையாளியான ராஜகோபால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியாக சிறைக்குப் போனார். தற்போது ஆயுள் தண்டனைக் கைதியாகவே காலமாகிவிட்டார். ஜோதிடர் பேச்சை கேட்டு 3-வது திருமணம் செய்ய முயற்சிக்காமல் இருந்திருந்தால் சர்வதேச அளவில் சாப்பாட்டு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக வலம் வந்திருப்பார் 'அண்ணாச்சி' ராஜகோபால்!
சக்கரவர்த்தையை சாய்த்த ஜோதிடம்!