காருக்கு முத்தமிட்ட ரசிகர்.. விஜய் மும்முரமாக என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
சென்னை: சென்னை பனையூர் வீட்டிற்கு விஜய் வந்தபோது அவர் இருந்த காரின் கண்ணாடிக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
விஜயின் பனையூர் வீடு மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமாக இயங்கி வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அப்போது விஜயின் கார் அங்கு வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் அவரை கண்ணாடி வழியாக பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.
பனையூர் வீட்டில் நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனை?.. அரசியலுக்கு வருகிறாரா?.. நடந்தது என்ன?
ரசிகர்கள் ஆரவாரம்
தளபதி, தளபதி என அழைத்தனர். பலர் கண்ணாடிக்குள் இருந்த விஜயுடன் செல்போனில் பலர் செஃல்பி எடுத்தனர். அப்போது ரசிகர்கள் மீது கார் ஏற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்பதில் தனது கவனத்தை விஜய் செலுத்தினார். டிரைவரிடம் பொறுமையாக ஓட்டுமாறு அவ்வப்போது கூறி கொண்டே வந்தார்.
கண்ணாடி
ஒரு கட்டத்தில் விஜய் தனது கையை கண்ணாடி வைத்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் கைகளில் கண்ணாடிக்கு வெளியே இருந்தபடியே முத்தமிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எப்போதும் ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்பவர்களின் விஜயும் ஒருவர் என்பதை இன்றைய தினமும் நிரூபித்து விட்டார்.
ரசிகர்கள்
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன் ஒரு பேருந்தில் ஏறி நின்று கொண்டு விஜய் புகைப்படம் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஷேர் செய்தார்.
|
அதிகம் ரீட்வீட்
இந்த செல்பிதான் 2020ஆம் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்டதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பனையூருக்கு இன்று வந்த விஜய் கருப்பு நிற கண்ணாடி அணிந்து கொண்டு சும்மா ஸ்டைலாக கெத்தாக இருந்தார். வழக்கமாக ரசிகர்களை சந்திக்கும் போது கைகளை அசைக்கும் விஜய் இந்த முறை காரில் உட்கார்ந்திருந்ததாலும் அந்த ஏரியா சிறியது என்றதாலும் ரசிகர்களின் பாதுகாப்பிலேயே குறியாக இருந்தார்.