ஷிவானி "அப்படி" போஸ் கொடுத்தப்போ தெரியலியா.. ஆயா வேலைன்னா மட்டமா.. செம வறுவலில் பிக் பாஸ்!
சென்னை: விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 4' இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
86வது நாளைக் கடந்து.. யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்கப் போகும் கடைசி நேர பரபரப்பில் ரசிகர்களை ஆழ்த்தியுள்ளது பிக் பாஸ்.
எப்போதுமே பிக் பாஸ் சீசன்களில், பிரீஸ் டாஸ்க் என்ற ஒன்று வைக்கப்படுவது வழக்கம். பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகை தந்து, தங்களது கருத்துக்களைச் சொல்வார்கள்.
நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தாரை பார்ப்பதால், அழுகை, சென்டிமெண்ட் என பல உருக்கமான காட்சிகள் தவறாமல் இடம்பிடிக்கும். இப்போது முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஆனால் நடந்ததோ வேறு.
ஷிவானி அம்மா கோபம்
இத்தனை நாள் மகளைப் பிரிந்து இருந்து விட்டாரே.. மடியில் வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்த ரசிகர், ரசிகர்களுக்கு பெரிய ஷாக் காத்துக்கொண்டிருந்தது. வந்ததும் வராததுமாக ஷிவானியை திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டார் அவர் தாயார். "நீ எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன சாதித்து விட்டாய், உன்னை அறையாமல் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சந்தோஷப்படு.. உனக்கு என்று தனியாக ஒரு தனித்துவம் கிடையாதா.. எதற்கு எப்ப பார்த்தாலும் பாலாஜி பின்னால் சுற்றிக் கொண்டு இருக்கிறாய்? கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க உனக்கு இந்த வீட்டில் பெண்களே இல்லையா? அதையும் பாலாஜிக்கு கொடுப்பியா? பாலாஜி மீது மட்டும் உனக்கு எதற்கு பொசசிவ்னஸ் இருக்கிறது?" என்று சகட்டுமேனிக்கு லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார்.
Recommended Video
ஆயா வேலையாம்
அதோடு விட்டிருந்தால் கூட, இது தாய்-மகள் பிரச்சினை என்று ரசிகர்கள் ஒதுங்கி இருப்பார்கள். ஆனால், அவர் சொன்ன இரண்டு வார்த்தைகள் இப்போது கடுமையான விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. பாலாஜிக்கு ஆயா வேலை பார்க்கத்தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாயா என்று ஷிவானி தாயார் கேட்கிறார். ஆயா வேலை என்பது அவ்வளவு மோசமான வேலையா? உலகத்தில் உழைத்து சாப்பிட கூடிய எந்த ஒரு வேலையும் தாழ்வு இல்லாத வேலை தானே? குழந்தைகளை பார்த்துக் கொள்வது.. வீட்டு வேலைக்குச் செல்வது போன்ற பணிகளில் ஈடுபடும் பெண்களை இந்த வார்த்தை கருமையாக கஷ்டப்படுத்தும் வகையில் இருக்கிறதே.. அவர் சொன்ன தோரணை அப்படி இருக்கிறதே.. என்றெல்லாம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
மற்றும் நம் உறவினர்களெல்லாம்..
ஷிவானி அம்மா சொன்ன இன்னொரு வார்த்தையும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது. இங்கு நடப்பதை "உனது அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார்.. நமது உறவினர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.." என்று மாயி திரைப்படத்தில் மின்னல் கதாபாத்திரத்தை அழைக்கும் தந்தை போல.. கூவி கூவி சொல்லிக்கொண்டு இருந்தார் ஷிவானி தாயார். இந்த வார்த்தைதான், ரசிகர்களை ரொம்பவே உசுப்பேற்றி விட்டது.
இன்ஸ்டாகிராம் படங்கள்
பாலாஜி பின்னால் அவர் சுற்றுவதுதான் உங்களுக்கு தப்பாக போய்விட்டதா? இத்தனை நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு நாளும் ஆடையை குறைத்துக் கொண்டே வந்து கவர்ச்சியின் எல்லையை தொட்டு சமூக வலைத்தளங்கள் முழுக்க ஜொள்ளு விட வைத்தவர் ஷிவானி, அதையெல்லாம் பார்த்து தந்தையும் உறவினர் எல்லோரும் சந்தோசமாக இருந்தார்களா? இப்போது தான் குடும்ப கவுரவம் கெட்டுபோய்விட்டதா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி திணற வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆடை குறைப்பு
தொலைக்காட்சித் தொடரில் இழுத்துப் போர்த்திக் கொண்டு பாந்தமாக நடித்தவர்தான் ஷிவானி. ஆனால் சினிமா ஆசை வந்துவிட்டதாலோ, என்னவோ தெரியவில்லை. சமீப காலங்களாக, கடுமையான ஆடை குறைப்பு புரட்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். 'டிக்கிலோனா' விளையாடலாமா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அவர் போட்டோக்கள் உடலின் ஒரு பகுதியை மட்டும் குறிவைத்தபடி இருந்தன. ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு, பாலாஜியுடன் பழகியது மட்டும் பெரிய குற்றச் செயல் போல பேசுவதன் பின்னணி என்ன? இது சிரிப்பு காட்டுவதைப் போல இருக்கிறதே தவிர, அவர் தாயார் கோபத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று கேலி செய்கிறார்கள் ரசிகர்கள்.