ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கு.. ஃபாத்திமா ஆவேசம்
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று ஸ்டெர்லைட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா ஆவேசமாக கூறினார்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஃபாத்திமா கூறுகையில் இந்த தீர்ப்பு வேதனை அளிப்பதாக இருந்தாலும் அதிர்ச்சி தருவதாக இல்லை. அதற்கு காரணம் இப்படிதான் நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.
முடிவுக்கு
ஆனாலும் இன்றைக்கு அந்த தீர்ப்பை அவர்கள் வெளியிடும் போது அது மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும். பசுமைத் தீர்ப்பாயம் இரு வழிகளில் இந்த பிரச்சினையை அணுகியிருக்கலாம். ஒன்று காற்று மாசு, நீர் மாசு ஆகியவற்றில் ஏற்பட்ட விதிமீறலை பார்த்து தீர்ப்பாயம் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
வெளிப்பாடாக
இன்னொரு பராமரித்தல் பிரச்சினை. இந்த பிரச்சினையை அவர்கள் ஆய்வு செய்து நாம் சொல்லும் தீர்ப்பு முறையானதா என அவர்களாகவே சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். இதை நான் சொல்லக் கூடாதுதான். இருந்தாலும் மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக இதை நான் கூறுகிறேன்.
உச்சநீதிமன்றத்தில்
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்வதற்கும் இந்த தீர்ப்பாயத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை நாங்கள் கேள்விக்குறியாக்குவோம். உச்சநீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச் செல்வோம்.
நீதிமன்றம் இருக்கிறது
என்ஜிடியின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்களின் தீர்ப்பு இதுவல்ல. தூத்துக்குடி மக்கள் இதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். சட்டரீதியான போராட்டத்தை முன்வைப்போம். மக்கள் இந்த தீர்ப்பை கேட்டு கொதி நிலையில் உள்ளனர். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டத்தில் அரசு, நீதிமன்றம் இருக்கிறது என்றார் அவர்.