தமிழகத்தில் மட்டும் கொரோனா பரிசோதனை கட்டணம் ஏன் அதிகம்.. மர்மம் என்ன? கமல்ஹாசன் கேள்வி
சென்னை: கொரோனா பரிசோதனைக்கான கட்டணம், தமிழகத்தில் குறையவில்லையே, அதன் மர்மம் என்ன என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
— Kamal Haasan (@ikamalhaasan) December 3, 2020
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?
இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/- பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.