போலீஸ் மீது தாக்குதல்... நடிகை ஜூலியின் காதலன் மீது புகார்
சென்னை: நடிகை ஜூலியின் காதலன் மீது போலீசாரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் போலீஸ் வாகனம் மீது நடிகை ஜூலியின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகை ஜூலிக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல் போலீசை தாக்கியதாகவும்,வேப்பேரி காவல்நிலைய காவலர் பூபதி புகார் அளித்துள்ளார்.
காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி , தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்.. பொங்கிய பொதுமக்கள்
திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஜூலி, காதலனுடன் நடுரோட்டில் அடிதடி வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.