15 விநாடிக்குள்ள இந்த படத்துல இருக்கற பாம்பை கண்டுபிடிச்சா.. நீங்க உண்மையிலேயே கெத்துதான்!
உருமறைப்பு பாம்பின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: காய்ந்த இலைகளுக்குள் மறைந்திருக்கும் பாம்பை கண்டுப்பிடிக்க சொல்லும் புகைப்படப் புதிர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
'இந்த படத்தில் ஒளிந்திருக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள்', 'இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடியுங்கள்', 'இந்த புகைப்படத்தில் எத்தனை 8 எண் இருக்கிறது' என்பது போன்ற புதிர்கள் வாட்ஸப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. நமது அறிவுத்திறனையும், கண் பார்வைத் திறனையும் சோதிக்கக் கூடிய இந்த வகையான புதிர்கள், பலருக்கு அதிக விருப்பமானவையாக உள்ளன. எனவே அது போன்ற புதிர் புகைப்படங்கள் அதிகப்படியான சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.
அந்த வகையில் தற்போது உருமறைப்பு பாம்பின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. உருமறைப்பு என்றால் 'உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப்படும் அமைப்பு' என்பது பொருளாகும்.
சம்பந்தப்பட்ட அந்த புகைப்படம் முழுவதும் காய்ந்த இலைகள் நிரம்பி இருக்கின்றன. அந்த இலைகளுக்குள் ஒரு பாம்பு இருக்கிறது. அதை 15 விநாடிகளுக்குள் கண்டுபிடிப்பவர்கள் மிகவும் திறமைசாலிகள் என்கிறது அந்த புதிர்.
அப்படியே அச்சுஅசலாக மனிதர்களை போலவே வாய், பல்.. இதுல சிரிப்பு வேற.. மிரள வைக்கும் மீனின் புகைப்படம்
செல்போனில் டைமரை ஆன் செய்துவிட்டு, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பலரும் அந்த பாம்பை தேடி வருகின்றனர். ஒரு சிலரின் கண்களுக்கு அந்த பாம்பு அகப்பட்டு கொண்டுள்ளது. ஆனால் பலர் அந்த பாம்பை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சரியாக கண்டுபிடித்தவர்கள் அந்த பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டு மறுபதிவு செய்து தங்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தியுள்ளனர். உண்மையில் அந்த பாம்பை கண்டுப்பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை என்பதை விளையாடும் போதும் உணர முடியும்.
படத்தில் உள்ள அந்த பாம்பு அமெரிக்காவில் வாழும் 'காப்பர்ஹெட்' எனும் பாம்பு வகையை சேர்ந்தது. அதிக விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் வட அமெரிக்காவில் தான் அதிகளவில் காணப்படுகின்றன. பொதுவாக பழுப்பு, ஆரெஞ்சு, இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும் இந்த பாம்புகளின் உடலில் அடர் பழுப்பு நிறத்தில் குறுக்கு பட்டைகள் இருக்கும். எனவே காய்ந்த இலைகளுக்குள் இந்த பாம்புகள் ஊடுருவி செல்லும் போது, அவை தனியாக வெளியே தெரிவதில்லை.